மேல்நிலை இரண்டாம் ஆண்டு
இளந்தமிழே
- சிற்பி பாலசுப்பிரமணியம்
கவிதைப்பேழை
மொழி
நுழையும்முன்
இளந்தமிழே
- சிற்பி பாலசுப்பிரமணியம்
நுழையும்முன்
தமிழ் மொழி நம் அடையாளம், பண்பாட்டின் நீட்சி; தோன்றிய காலந்தொட்டு மக்களால் பேசப்படும் எழுதப்பட்டு உயிர்ப்பெரும் இளமையோடு இருப்பது இன்றும் தமிழ் மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது அத்தகைய தமிழ் பெருமையைப் பேசாத மரபுக்கவிஞர்கள் இலர் எனலாம் தமிழ் பல புதிய உளடக்கங்களால் தன்னைப் புதுப்பித்துக்கொண்டு பழஞ்சிறப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது கவிஞர்கள் அவர்
செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்
செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்
நம்கைகள் அதனைப்போல் சிவந்து நோகத்
தாமுழைக்கும் தொழிலாளர் வியர்வை வெள்ளம்
எம்முகின்ற தோள்மீதில் முத்து முத்தாய்
வீற்றிருக்கும், அவையெல்லாம் வியந்து பாட
எம்மருமைச் செந்தமிழே உன்னை யல்லால்
ஏற்றதுணை வேறுண்டோ ? இயம்பி டாயே
மூண்டு வரும் கவிதை வெறிக் குணவாய் எங்கள்
முத்தமிழே' நீயுள்ளாய்: முன்னம் ஓர் நாள்
பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தாய்
பாரிமுதல் வள்ளல்களை ஈன்று தந்தாய்
மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ் குயிலே கூவி வா,வா
கூண்டதனை உடைத்தெழுந்த சிங்கம் போலக்
குளிர்பொதிகைத் தென்தமிழ் சீறி வா, வா
இலக்கணக் குறிப்பு
செம்பரிதி, செந்தமிழ், செந்நிறம் பண்புத்தொகைகள் முத்து முத்தாய் - அடுக்குத்தொடர் சிவந்து - வினையெச்சம் வியர்வை வெள்ளம் - உருவகம்
உறுப்பிலக்கணம்
சாய்ப்பான் = சாய் + ப் + ப் + ஆன்
சாய் - பகுதி
ப் - சந்தி
ப் - எதிர்கால இடைநிலை,
ஆன் - படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி
விம்முகின்ற = விம்மு +கின்று + அ விம்மு - பகுதி,
கின்று - நிகழ்கால இடைநிலை,
அ - பெயரெச்ச விகுதி
வியந்து = விய +த்(ந்) + த் + உ
விய - பகுதி.
த்(ந்) ஆனது விகாரம்),
த் இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
இருந்தாய் - இரு + த்(ந்) +த் +ஆய்
இரு - பகுதி,
த்(ந்) - ஆனது விகாரம் ),
த் - இறந்தகால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
புணர்ச்சி விதி:
செம்பரிதி = செம்மை + பரிதி விதி : ஈறு போதல் - செம் + பரிதி - செம்பரிதி
வானமெல்லாம் = வானம் + எல்லாம் விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - வானமெல்லாம்
உன்னையல்லால் = உன்னை + அல்லால்
விதி : இஈஐ வழி யவ்வும் - உன்னை + ய் + அல்லால்
விதி : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - உன்னையல்லால்
செந்தமிழே = செம்மை + தமிழ் விதி : ஈறு போதல் - செம் + தமிழே விதி : முன்னின்ற மெய் திரிதல்
- செந்தமிழே
நூல்வெளி:
இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் சிற்பி பாலசுப்பிரமணியம்; பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர் மொழிபெயர்ப்புக் காகமும் ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூலிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். இவருடைய கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி இந்தி ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலிய பல கவிதை நூல்களை ஆக்கியவர்; இலக்கியச்சிந்தனைகள் மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார் மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்; சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்
கற்பவை கற்றபின்
தமிழ்மொழிப் பாடத்தில் மொழி வாழ்த்துப் பாடல் இடம்பெறுவதன் நோக்கம் குறித்த கருத்துகளைத் தொகுத்துக் கலந்துரையாடல் நிகழ்த்துக
நம்மை அளப்போம்
1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல்எது?
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்னூல்
(விடை: இ) தொல்காப்பியம்)
2. மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்!" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயம்
அ) அடி மோனை, அடி எதுகை
ஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ அடி எதுகை, சீர்மோனை
ஈ) சீர் எதுகை, அடிமோனை
[விடை: இ) அடி எதுகை, சீர் மோனை)
பாடநூல் வினாக்கள்
பலவுள் தெரிக
1.மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்
1) பாண்டியரின் சங்கத்தில்
கொலுவிருந்தது
2) வள்ளல்களைத் தந்தது
3) பொதிகையில் தோன்றியது
அ) 1,மட்டும் சரி
ஆ) 1, 3 , இரண்டும்
இ 2,மட்டும் சரி
ஈ) 1, 2, இரண்டும் சரி
விடை : ஈ)1, 2, இரண்டும் சரி
குறுவினா
1) கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
செந்நிறத்து வானம் போல் சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி.
சிறுவினா :
1.செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்"தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக?
கதிரவன் தன் கதிர்களைச் சுருக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை
ஆனால் கவிஞர் செய்மைமிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார்
கதிரவனின் கதிரொளி பட்டு வானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட விளக்குகிறார்
2.பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலும்உள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக?
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே
நன்னூல்
மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு மெய்சிலிர்க்க தமிழ் குயிலே | வா வா,
- சிற்பி பாலசுப்பிரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம்
நன்னூல் பழையவற்றை ஒதுக்கி புதியவற்றைப் புகுத்த வேண்டும் தேவையற்ற சொல், பொருள், வழக்கம் எல்லாம் காலமாறுதலுக்கு ஏற்ப பதிய சொல், பொருள், வழக்கம் தேவை
| பழமை செயல்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுக்க வேண்டும் தமிழ்த்தாயின் பழமைக்கு செயல்பாடுகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து தமிழ்க்குயிலே மெய்சிலிர்க்குமாறு பாட வா
நெடுவினா
1. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து
எழுதுக..
இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பிள்வகுமாறு பாடுகிறார்
★ செம்மைமிரு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்பாடாய்க் காட்சி தருகிறது
★ உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியாவைத் துளிகள் முத்து முத்தாய்க காணப்படுகிறது
★ இக்காட்ரியெல்வாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
★ பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே
★ தமிழே நீ! பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய் பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்
★ உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ் குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா
★ கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா.
★ குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா என்று சிற்பி தமிழின் சீரின்மையைத் திறம் வியந்து பாடுகிறார்.
இலக்கணக் குறிப்பு
செம்பரிதி, செந்தமிழ், செந்திறம் முத்து முத்தாய் சிவந்து வியர்வை வெள்ளம்
உறுப்பிலக்கணம்
சாய்ப்பான் = சாய் + ப் + ப்
- பண்புத்தொகைகள்
அடுக்குத்தொடர் வினையெச்சம் உருவகம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,
பாடக் குறிப்புகளை வீடியோ பதிவாக பார்க்க பகுதி 1
பாட வினா விடைகளை பார்க்க பகுதி 2

0 Comments