கற்கண்டு
இலக்கணம்
எழுத்து, சொல்
மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம், மொழியின் சிறப்புகளை அறியவும் இலக்கணம் துணை செய்யும்.
எழுத்து :
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம்,
மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் ஆகும். அவற்றுள் உயிரளபெடை, ஒற்றளபெடை ஆகிய இரண்டு அளபெடைகள் குறித்து இங்குக் காண்போம்..!
அளபெடுத்தல் - நீண்டு ஒலித்தல் பேச்சு வழக்கில் சொற்களை நீட்டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும் இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது.
எ.கா.
அம்மா, தம்பிஇ
1.உயிரளபெடை :
செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும் அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.
உயிரளபெடையின் வகைகள் :
உயிரளபெடை மூன்று வகைப்படும் அவை :
அ) செய்யுளிசை அளபெடை
ஆ)இன்னிசை அளபெடை
இ) சொல்லிசை அளபெடை
அ) செய்யுளிசை அளபெடை :
செய்யுளில் ஓசை குறையும்போது
அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.
ஓதல் வேண்டும் - மொழி முதல்
உறாஅர்க்கு உறுநோய் - மொழியிடை
நல்ல படாஅ பறை - மொழியிறுதி
ஆ)இன்னிசை அளபெடை:
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்
மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.
இ) சொல்லிசை அளபெடை:
செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து
அளபெடுப்பது சொல்லிசை யளபெடை ஆகும்.
உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்.
வரனசைஇ இன்னும் உளேன்.
நசை விருப்பம்; விரும்பி என்னும் இ என பொருள் தருவதற்காக
நசை அளபெடுத்தது. பெயர்ச்சொல், வினை அடையாக மாறியது.
2. ஒற்றளபெடை :
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகள் ங், ஞ்,ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை
ஆகும்.
எஃஃ. கிலங்கிய கையராய் இன்னுயிர்
வெஃஃ குவார்க்கில்லை வீடு
சொல் :
பூ மலர்ந்தது
மாடு புல் தின்றது
ஓர் எழுத்து தனித்தோ , பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் மைவது சொல் ஆகும். அது
அ) இரு திணைகளையும் ஐந்து
பால்களையும் குறிக்கும்.
ஆ) மூவகை இடங்களிலும் வரும்
இ) உலக வழக்கிலும் செய்யுள்
வழக்கிலும் வரும்
ஈ) வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்
மூவகை மொழி:
◆ தனி மொழி,
◆ தொடர்மொழி,
◆ பொதுமொழி
என மொழி மூன்று வகையாக அமையும்
ஒருமொழி ஒருபொரு எனவாம் தொடர்மொழி பலபொரு எனபொது இருமையும் ஏற்பன - (நன்னூல் - 260)
தனிமொழி:
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது தனி மொழி எனப்படும்
எ.கா. கண், படி - பகாப்பதம்
கண்ணன், படித்தான் - பகுபதம்.
தொடர்மொழி:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி மொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர் மொழி ஆகும்
எ.கா.
கண்ணன் வந்தான்,
மலர் வீட்டுக்குச் சென்றேன்.
பொதுமொழி:
ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து தனிமொழிக்கும். தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொது மொழி எனப்படும்
எ.கா.
எட்டு - எட்டு என்ற எண்ணைக் குறிக்கும்.
வேங்கை - வேங்கை என்னும் மரத்தைக் குறிக்கும்.
இவையே என் + து எனவும் வேம் + கை எனவும் தொடர்மொழிகளாகப் பிரிந்து நின்று எள்ளை உண், வேகின்ற கை எனவும் பொருள் தரும். இவை இருபொருள்களுக்கும் பொதுவாய் அமைவது பொது மொழியாகவும் இருக்கிறது.
தொழிற்பெயர்:
ஒரு வினை அல்லது செயலைக்
குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால், ஆகியவற்றைக் குறிப்பாகவோ
வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
எ.கா.
ஈதல், நடத்தல்
விகுதி பெற்ற தொழிற் பெயர்கள்:
வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற
தொழிற்பெயர் ஆகும்.
வினையடி விகுதி தொழிற்பெயர்
ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்
எ.கா.
நட என்பது வினையடி
தடை, படத்தை, நடத்தல்
எதிர்மறைத் தொழிற்பெயர் :
எதிர்மறைப் பொருளில் வருவது
எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.
எ.கா.
நடவாமை, கொல்லாமை.
முதனிலைத் தொழிற்பெயர் :
விகுதி பொரியல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல் முதனிலைத் தொழிற் பெயராகும்,
எ.கா :
தட்டு ,உரை,அடி
இச் சொற்கள் முறையே தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று
பொருள்படும் போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.
முதனிலை திரிந்த தொழிற்பெயர்:
இவை விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற் பெயர்களாகும்
வினையாலணையும் பெயர்:
ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் தன்மையை வேறொரு பணிவை யைக் கொண்டு முடிவது
வினையாலணையும் பெயர் எனப்படும். அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.
எ.கா.
வந்தவர் அவர்தான் பொறுத்தார் பூமி யாழ்வார் தொழிற்பெயர்க்கும் வினை யாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடு :
அட்டவணை
கூடுதல் வினாக்கள்
1. சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
சார்பெழுத்துகள், பத்து வகைப்படும். அவை, உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்
ஆகியன.
2. அளபெடை என்றால் என்ன?
செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்வதற்காகச் சில எழுத்துகள் நீண்டு ஒலிப்பதை அளபெடுத்தல் என்று கூறுவர். உயிர்மெய் எழுத்துகள் சில, நீண்டு ஒலிக்கும்.
3. உயிரளபெடை என்றால் என்ன?
செய்யுளில் ஓசை குறையும்போது, மொழிக்கு முதல், இடை, கடை என மூன்று நிலைகளிலும் உயிர் நெட்டெழுத்துகள் ஏழும், தத்தம் அளவில் நீண்டு ஒலிப்பதை, உயிரளபெடை என்பர். அளபெடுக்கும்
நெட்டெழுத்தின் இனமான உயிர்க் குற்றெழுத்து அடையாளமாக எழுதப்படும்
4. உயிரளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
உயிரளபெடை, மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை யளபெடை அல்லது இசைநிறை யளபெடை,
அ) செய்யுளிசை யளபெடை
ஆ)இன்னிசை யளபெடை
இ) சொல்லிசை யளபெடை
5. செய்யுளிசை அளபெடை என்றால் என்ன?
செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவுசெய்ய நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் 'செய்யுளிசை அளபெடை' என்பர்.
எ - கா :
ஒஒதல் வேண்டும்
இக்குறளில் 'ஒதல் வேண்டும்' என அமைந்தால், 'மாமுன் நேர் எனத் தளை தட்டும். ஆதலால் ஒஒதல்' என நெட்டெழுத்து நீட்டி ஒலித்தல், 'விளம் முன் நேர்' எனத் தளை அமைந்தது.
6. இன்னிசை அளபெடை
என்றால் என்ன?
செய்யுளில் ஓசை குறையாத (தளை தட்டாத) இடத்தும், இனிய ஓசைக்காக (குறில் நெடிலாகி) அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
எ - கா :
கெடுப்பதும் என்பது கெடுப்பதூஉம்... எனவும், எடுப்பதும் என்பது எடுப்பதூஉம்... எனவும்வரும்
7. சொல்லிசை அளபெடை என்றால் என்ன?
செய்யுளில் பெயர்ச்சொல்லானது வினைஎச்சமாகமாறி, அளபெடுப்பது, சொல்லிசை அளபெடை ஆகும்.
உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்.
வரனசைஇ இன்னும் உளேன். 'விருப்பம்' எனப் பெயர்ப்பொருள் தரும் ‘நசை', 'விரும்பிச்' என்னும் (வினைஎச்சப்) பொருள் தருவதற்காக 'நசைஇ' என அளபெடுத்ததால், சொல்லிசை அளபெடை ஆயிற்று.
8. ஒற்றளபெடை என்றால் என்ன?
செய்யுளில் மெய்எழுத்துகளின் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்ய
ங், ஞ்,ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை எனப்படும்.
- எகா : கலங்ங்கு நெஞ்சமில்லை
ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட, அளபெடுத்த அவ்வெழுத்தே அடுத்து எழுதப்பெறும்
9.சொல் எனப்படுவது ?
ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது, சொல்
எனப்படும்.
எ - கா :
ஆ (பசு), புள் (பறவை), மாக்கள் (விலங்குகள்)
10.மொழி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
மொழி, மூன்று வகைப்படும். அவை தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி எனப்படும்.
11.தனிமொழி என்றால் என்ன?
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி எனப்படும்
எ.கா :
பூ, மாடு, கண், கண்ணன்.
12. தொடர்மொழி என்றால் என்ன?.
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனி மொழிகள் தொடர்ந்து நின்று, பொருள்களைத் தருவது
தொடர் மொழியாகும்.
எ - கா : கண்ணன் வந்தான்.
நிலம் கடந்தான்
கடந்தான் வினையாலணையும் பெயர் - நிலத்தைக் கடந்த நெடுமால் எனவும் பொருள் தரும்
13. பொதுமொழி என்றால் என்ன?
ஒரு சொல், தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே, பிரிந்துநின்று, தொடர்மொழியாகி வேறு தா + மரை (தொடர்மொழி) - தாவுகின்ற மானைக் குறிக்கும் பொருளையும் தருவது பொதுமொழியாகும்.
எ.கா :
தாமரை (தனிமொழி) - தாமரைப்பூவைக் குறிக்கும்
இவ்வாறு ஒருசொல், தனிமொழியாகவும் தொடர்மொழியாகவும் வெவ்வேறு பொருள் தருவது
பொதுமொழியாகும்.
,,,,,,,,,,,,,,,
#BrightZoom, #10th
பத்தாம் வகுப்பு தமிழ்,
எழுத்து, சொல் -இலக்கணம்,
விளக்கம் மற்றும் வினா விடை விடியோ பதிவை பார்வையிட :

0 Comments