6 - ஆம் வகுப்பு தமிழ் முக்கிய பாட குறிப்புகள் மற்றும் வினா விடைகள்...!!!

Bright Zoom Tamil

பாடம் 1 : 

தமிழ்த்தேன் 

இன்பத்தமிழ்

''தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!தமிழுக்கு மணமென்று பேர் -இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்தஊர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்தமிழ் நல்லபுகழ்மிக்க புலவர்க்கு வேல்!தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்ததேன்!தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!"

என்ற பாடலை இயற்றியவர்

 - "பாவேந்தர் பாரதிதாசன்"

6 - ஆம் வகுப்பு தமிழ் முக்கிய பாட குறிப்புகள் மற்றும் வினா விடைகள்...!!!

Bright Zoom Tamil

பாடம் 1 : 

தமிழ்த்தேன் இன்பத்தமிழ்


சொல்லும் பொருளும் :

நிருமித்த - உருவாக்கிய

விளைவு - விளைச்சல் 

சமூகம் - மக்கள் குழு

அசதி - சோர்வு


பாரதிதாசன் பற்றியக் குறிப்புகள் :

★பாரதிதாசனின் இயற்பெயர் - சுப்புரத்தினம்

★ பிறந்த ஆண்டு 29.4.1891

★ பெற்றோர் : கனகசபை - லட்சுமி பிறந்த ஊர் புதுச்சேரி

★ 16-வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.

★ 1938-ல் இந்தி எதிர்ப்பு போராடத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். புதுவையில் பாரதியின் கட்டளைக்கிணங்கப் பாடியது * "எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி

★ ஏழுகடல் அவள் வண்ணமடா" என்ற பாடல், இதனைப் பாரதி " ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்பு ரத்தினம் எழுதியது குறிப்பிட்டுச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார். 

★ பாரதிதாசன் “புரட்சிக்கவி ” என்றும் “பாவேந்தர்" என்றும் போற்றப்படுகிறார். எனக்


பாரதிதாசன் வலியுறுத்திய கருத்துக்கள் :

★ பெண்கல்வி

★ கைம்பெண் மறுமணம் 

★ பொதுவுடமை

★ பகுத்தறிவு


பாரதிதாசன் இயற்றிய நூல்கள் :

★ பாரதிதாசன் கவிதை தொகுப்பு 1,2,3

★ இசை அமுது 1,2

★ பாண்டியன் பரிசு

★ எதிர்பாராத முத்தம்

★ சேர தாண்டவம்

★ அழகின் சிரிப்பு

★ குடும்ப விளக்கு

★ இருண்ட வீடு

★ குறிஞ்சித்திட்டு

★ கண்ணகி

★ புரட்சிக் காப்பியம்

★ மணிமேகலை வெண்பா

★ காதல் நினைவுகள்

★ கழைக்கூத்தியின் காதல்

★ தமிழச்சியின் கத்தி

★ அமைதி

★ இளைஞர் இலக்கியம்

★ சௌமியன்

★ நல்வ தீர்ப்பு

★ தமிழ் இயக்கம்

★ இரண்யன் அல்லது இணையற்ற வீரன்

காதலா கடமையா?

சஞ்சீவி பார்வதத்தின் சாரல்

பொதுவுடமையை வலியுறுத்துவது - சஞ்சீவி பார்வதத்தின் சாரல்

★ இயற்கையை வருணிப்பது - அழகின் சிரிப்பு

★ கற்ற பெண்களின் சிறப்பைக் கூறுவது - குடும்ப விளக்கு

★ கல்லாத பெண்களின் இழிவைக் கூறுவது - இருண்ட வீடு

★ பில்கணியத்தின் தழுவல் புரட்சிக்காப்பியம்

★ பாரதிதாசன் உரை எழுதிய நூல் - திருக்குறள்.

★ பாரதிதாசன் நடத்திய இதழ் குயில்

★ பாரதிதாசன் மறைந்த ஆண்டு 1964

★ "அறிவுக் கோயிலைக் கட்டி  அதில் நம்மைக் குடியேற்ற விரும்புகின்ற பேர்றஞன்" என்று பாரதிதாசனைப் புகழ்ந்தவர்?

 - புதுமைப்பித்தன்


" தமிழே உயிரே வணக்கம்

தய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்

அமிழ்தே நீ இல்லை என்றால்

அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்

தமிழே உன்னை நினைக்கும்

 தமிழன் என் நெஞ்சம்  இனிக்கும் இனிக்கும்”

என்ற பாடலை பாடியவர்

 - கவிஞர் காசி ஆனந்தன்

★ நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் நிலவென்று தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் - தமிழெங்கள்

★ அமுதென்று என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - அமுது + என்று

★ பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் - நிலவு, மணம்