பத்தாம் வகுப்பு தமிழ்


தமிழ்ச்சொல் வளம்

 "நாடும் மொழியும் நமதிரு கண்கள்" என்றவர் - பாரதியார்

"தமிழல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது, தமிழிலுள்ள ஒருபொருட் பலசொல் வரிசைகள் அவற்றில் இல்லாக்குறை எந்தத் தமிழறிஞர்க்கும் மிகத்தெளிவாகத் தோன்றும். தமிழில் மட்டும் பயன்படுத்தப்பட்டுத் தமிழுக்கே சிறப்பாக உரியனவாகக் கருதப்படும் சொற்கள் மட்டுமன்றித் தெலுங்கு, கன்னடம், முதலிய பிற திராவிட மொழிகளுக்கு உரியனவாகக் கருதப்படும் சொற்களும் தமிழில் உள” என்று கூறியவர்-கால்டுவெல்

(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில்)

ஒரு தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான தமிழ்ச்சொற்கள்:

தாள்: 

நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி

தண்டு: 

கீரை, வாழை முதலியவற்றின் அடி

கோல்: 

நெட்டி, மிளகாய்ச்செடி முதலியவற்றின் அடி

தூறு : 

குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடிதட்டு அல்லது தட்டை: கம்பு, சோளம் முதலியவற்றின் அடி

கழி : 

கரும்பின் அடி

கழை: 

மூங்கிலின் அடி

அடி: 

புளி, வேம்பு முதலியவற்றின் அடி


ஒரு தாவரத்தின் கிளைப்பிரிவுகளுக்கு வழங்கும் சொற்கள்:

கவை: 

அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை கொம்பு அல்லது கொப்பு : கவையின் பிரிவு

கிளை : 

கொம்பின் பிரிவு

சினை: 

கிளையின் பிரிவு

போத்து: 

சினையின் பிரிவு

குச்சு: 

போத்தின் பிரிவு

இணுக்கு: 

குச்சியின் பிரிவு


காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள்:

சுள்ளி: 

காய்ந்த குச்சு(குச்சி)

விறகு: 

காய்ந்த சிறுகிளை

வெங்கழி: 

காய்ந்த கழி

கட்டை: 

காய்ந்த கொம்பும் கவையும் அடியும்


தாவரத்தின் இலை வகைகளைக் குறிக்கும் தமிழ் சொற்கள்:

இலை: 

புளி, வேம்பு முதலியவற்றின் இலை

தாள்: 

நெல், புல் முதலியவற்றின் இலை

தோகை: 

சோளம், கரும்பு முதலியவற்றில் இலை

ஓலை: 

தென்னை, பனை முதலியவற்றின் இலை

சண்டு: 

காய்ந்த தாளும் தோகையும்

சருகு : 

காய்ந்த இலை


தாவரத்தின் நுனிப்பகுதியை வழங்கும் தமிழ்ச் சொற்கள்:

துளிர் அல்லது தளிர்: 

நெல், புல் முதலியவற்றின் கொழுந்து

முறி அல்லது கொழுந்து: 

புளி, வேம்பு முதலியவற்றின் கொழுந்து

குருத்து: 

சோளம், கரும்பு, தென்னை, பனை முதலியவற்றின் கொழுந்து

கொழுந்தாடை: 

கரும்பின் நுனிப்பகுதி


பூவின் நிலைகளைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள்:

அரும்பு: 

பூவின் தோற்றநிலை

போது: 

பூ விரியத் தொடங்கும் நிலை

மலர் (அலர்): 

பூவின் மலர்ந்த நிலை

வீ: 

மரஞ்செடியினின்று பூ கீழே விழுந்த நிலை

செம்மல்: 

பூ வாடின நிலை


தாவரத்தின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கும் தமிழ்ச்சொற்கள்:

பூம்பிஞ்சு: 

பூவோடு கூடிய இளம்பிஞ்சு

பிஞ்சு: 

இளம் காய்

வடு: 

மாம்பிஞ்சு

மூசு: 

பலாப்பிஞ்சு

கவ்வை: 

எள்பிஞ்சு

குரும்பை: 

தென்னை, பனைமுதலியவற்றின் இளம் பிஞ்சு  முட்டுக் குரும்பை: சிறு குரும்பை

இளநீர்: 

முற்றாததேங்காய்

நுழாய்: 

இளம்பாக்கு

கருக்கல்: 

இளநெல்

கச்சல்: 

வாழைப்பிஞ்சு


தாவரத்தின் குலை வகைகலைக்( காய்களையோ கனிகளையோ) குறிப்பதற்கான தமிழ்ச் சொற்கள்:

கொத்து: 

அவரை, துவரை முதலியவற்றின் குலை

குலை: 

கொடி முந்திரி போன்றவற்றின் குலை

தாறு: 

வாழைக் குலை

கதிர்: 

கேழ்வரகு, சோளம் முதலியவற்றின் கதிர்

அலகு அல்லது குரல்

நெல், தினைமுதலியவற்றின் கதிர்

சீப்பு: 

வாழைத் தாற்றின் பகுதி


தாவரத்தில் கெட்டுப்போன காய்களையும் கனிகளையும் வழங்கும் தமிழ்ச்சொற்கள்

சூம்பல் :

நுனியில் சுருங்கிய காய்

சிவியல் :

சுருங்கிய பழம்

சொத்தை: 

புழுபூச்சி அரித்த காய் அல்லது கனி

வெம்பல்: 

சூட்டினால் பழுத்த பிஞ்சு

அளியல்: 

குளுகுளுத்த பழம் அழுகல்: 

குளுகுளுத்து நாறிய பழம்

சொண்டு: 

பதராய்ப் போன மிளகாய் கோட்டான் காய் அல்லது  கூகைக்காய்: கோட்டான்


உட்கார்ந்ததினால் கெட்டுப்போன காய்

தேரைக்காய்: 

தேரை அமர்ந்ததினால் கெட்டுப்போன காய்

அல்லிக்காய்: 

தேரை அமர்ந்ததினால் கெட்டுப்போன தேங்காய்

ஒல்லிக்காய்: 

தென்னையில் கெட்ட காய்


பழங்களின் மேற்பகுதியை வழங்கும் தமிழ்ச்சொற்கள்:

தொலி: 

மிக மெல்லியது

தோல்: 

திண்ணமானது தோடு வன்மையானது

ஓடு: 

மிக வன்மையானது

குடுக்கை: 

சுரையின் ஓடு

மட்டை: 

தேங்காய் நெற்றின் மேற்பகுதி

உமி:

நெல், கம்பு முதலியவற்றின் மூடி

கொம்மை: 

வரகு, கேழ்வரகு முதலியவற்றின் உமி


தவரங்களின் இளம்பருவத்திற்கான தமிழ்ச்சொற்கள்:

நாற்று: 

நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை கன்று: மா, புளி, வாழை முதலியவற்றின் இளநிலை

குருத்து: 

வாழையின் இளநிலை

பிள்ளை: 

தென்னையின் இளநிலை

குட்டி: 

விளாவின் இளநிலை

மடலி அல்லது வடலி: 

பனையின் இளநிலை

பைங்கூழ்: 

நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர்

★ கோதுமையை எடுத்துக்கொண்டால் அதில் சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை, வாற்கோதுமை முதலிய சிலவகைகளே உண்டு.

★ ஆனால் தமிழ்நாட்டு நெல்லிலோ செந்நெல், வெண்னெல், கார்நெல் என்றும் சம்பா, மட்டை, கார் என்றும் அவற்றில் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச் சம்பா,

★ ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

★ வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி முதலிய சிறுகூனகள் தமிழ்நாட்டிலன்றி வேறெங்கும் விளைவதில்லை.


தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார் பற்றியக் குறிப்புகள்:

★ சொலாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்.

★ திருச்சிராப்பள்ளிக்கு sew அருகில் அமைந்துள்ள அல்லூரில் "திருவள்ளுவர் தவச்சாலை" ஒன்றை அமைத்திருப்பவர்.

★ பாவாணர் நூலகல்ப ஒன்றைஉருவாக்கியுள்ளார். 

★ தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வருபவர்

★ தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர்

★ விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர்.

★ அதற்காக தமிழ்த்தென்றல் திரு.வி.க போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டார். இடன்ரளவும் அவ்வாறே எழுதித் தமிழுக்குத் தனிப்பெரும் புகழை நல்கி வருபவர்.


இவர் எழுதிய நூல்கள்:

★ இலக்கண வரலாறு தமிழிசை இயக்கம்

★ தனித்தமிழ் இயக்கம்

★ பாவாணர் வரலாறு குண்டலகேசி உரை

★ யாப்பருங்கலம் உரை புறத்திரட்டு உரை

★ திருக்குறள் தமிழ் மரபுரை

★ காக்கைப் பாடினிய உரை

★ தேவநேயம்

★ "உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே.மாநாட்டுக்குரிய முதல் மொழியும் தமிழே" என்றவர் - பன்மொழிப்புலவர்

- க.அப்பாத்துரையார்

★ பாவானர் தமிழ்ச்சொல்வளம் கட்டுரையில் வித்துவகை, வேர்வகை, அரித்தாள் வகை, காய்ந்த இலை வகை, இலைக்காம்பு வகை, பூமடல் வகை, அரும்பு வகை, பூக்காம்பு வகை, இதழ் வகை, காய்வகை, கனிவகை, உள்ளீட்டு வகை, உள்ளீட்டு வகை,தாவரக் கழிவு வகை, விதை வகை, விதைத் தோல் வகை, பதர் வகை, பயிர் வகை, கொடி வகை, மர வகை, கரும்பு வகை, காய்ந்த பயிர் வகை, வெட்டிய விறகுத்துண்டு வகை, மரப்பட்டை வகை, பயிர்ச்செரிவு வகை, நிலத்தின் தொகுப்பு வகை, செய் வகை, நில வகை, நன்செய் வகை, வேலி வகை, காட்டு வகை ஆகியவற்றில் சொல்வளங்களையும் விளக்கியுள்ளார்.


தேவநேயப் பாவாணர் பற்றியக் குறிப்புகள்:

★ மொழிஞாயிறு என்று அழைக்கப்படுகிறார்.

★ சொல்லாய்விக் கட்டுரைகள் என்னும் நூலை எழுதியுள்ளார்.

★ தமிழ்ச்சொல் வளம் என்னும் கட்டுரைஐ எழுதியுள்ளார்.

★ பல்வேறு இலக்கணக் கட்டுரைகளையும் மொழியாராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதிய பாவாணர், தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.

★ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.

★ உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர்.

★ போர்ச்சுக்கீசு நாட்டின் தலைநகர் லிசுபனில் 1554 ல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில் தான் மொழிபெயர்க்கப்பட்டது.. இந்நூல் ரோமன் வடிவில் அச்சிடப்பட்டுள்ளது

★ இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான்.