ஆறாம் வகுப்பு தமிழ்
முதல்பருவம்
கவிதைப்பேழை
தமிழ்க்கும்மி
Bright Zoom Tamil
நுழையும் முன் :
கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப்பாடி ஆடுவது மகிழ்ச்சியான அனுபவம் குப்மியில் தமிழைப் போற்றிப்பாடி ஆடுவது பெரும் மகிழ்ச்சி நருவதாகும். வாருங்கள்! தமிழின் பெருமைனய வாயாரப் பேசலாம். காதாரக் கேட்கலாம். இசையோடு பாடலாம். கும்மி கொட்டி ஆடலாம்.
கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி, இலங்
கோதையரே கும்மி கொட்டுங்கடி நிலம்
எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!
ஊழி பலநூறு கண்டதுணாம் அறிவு
ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் - பெரும்
ஆழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்
ஆயயாமலே நிலை நின்றதுவாம்!
பொய் அகற்றும். உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு
பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் உயிர்
மெய்புகட்டும்; அறமேன்மை கிட்டும்; இந்த
மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !
- பெருஞ்சித்திரனார்
சொல்லும் பொருளும்:
ஆழிப் பெருக்கு - கடல் கோள்
மேதிவி - உலகம்
ஊழி - நீண்டதொருகாலப்பகுதி
உள்ளப்பூட்டு - அறிய விரும்பாமை
பாடலின் பொருள்:
இனம்பெண்கனே! தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவிடும் வகையில் வகசுனைக் கொட்டிக் கும்மியடிப்போம்.
பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழி. அறிவு அற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி பெரும் கடல் சீற்றங்கள், கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.
பொய்யை அகற்றும் மொழி, தமிழ். அது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழி; அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழி; உயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி : உமர்ந்த அறத்தைத் தரும் மொழி. இந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி.
நூல் வெளி :
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம் இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார் தனித்தமிழையும் தமிழுனார்வையும் பரப்பிய பாவலர் இவர்
இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளத இந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.
கற்பவை கற்றபின் :
1. தமிழ்க்கும்மி பாடலை இசையோடு பாடி மகிழ்க.
2. பின்வரும் கவிதை அடிகளைப் படித்து மகிழ்க.
வான்தோன்றி, வளி தோன்றி, நெருப்புத் தோன்றி மண் தோன்றி மழை தோன்றி, மலைகள் தோன்றி
மனல் தோன்றி, உயிர் தோன்றி, உணர்வு தோன்றி, ஒளி தோன்றி ஒலி தோன்றி, வாழ்ந்த அந்நாள்
தேன் தோன்றியது போல மக்கள் நாவில், செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி
- வாணிதாசன்
சிறுவினா :
1. கால வெள்ளத்தை எதிர்த்து நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன ?
தமிழ் மொழி காலவெள்ளத்தை எதிர்த்து நிற்க காரணம் :
★பலநூறு ஆண்டுகளைக் கண்டது.
★ அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்டது.
2. தமிழ்க் கும்மி பாடலின் வழி நீங்கள் அறிந்து கொண்டவற்றை உம் சொந்த நடையில் தருக.
தமிழ்க் கும்மி பாடலின் வழி நாங்கள் அறிந்து :
★செந்தமிழின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவண்டும்
★ பலநூறு ஆண்டுகளைக் கண்டது.
★ அறிவுஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்டது.
★ கடல் சீற்றங்கள், கால மாற்றங்களால் அழியாமல் நிலைத்திருக்கும்.
★பொய்யை அகற்றும்.
★மனத்தின் அறியாமையை நீக்கும்.
★அன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்திருக்கும்.
★ உயிர் போன்ற உண்மையை ஊட்டும்.
★ உயர்ந்த அறத்தைத் தரும்.
★ உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளை காட்டும்.
சிந்தனை வினா :
1. தமிழ்மொழி அறியாமையை எவ்வாறுஅகற்றும் ?
தமிழ்மொழி அறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்டது. அவை பொய்யை அகற்றி, உண்மையை ஊட்டி அறியாமையை அகற்றும்.
கூடுதல் வினாக்கள் - விடைகள்:
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஆழிப்பெருக்கு என்னும் சொல்லின் பொருள்
அ)கடல்கோள்
ஆ)உலகம்
இ)மேதினி
ஈ) ஊழி
விடை: அ) கடல்கோள்
2.நீண்டதொரு காலப்பகுதி என்னும் சொல்லின் பொருள்
அ) மேதினி
ஆ) உலகம்
இ) ஊழி
ஈ) கடல்கோள்
விடை:இ) ஊழி
கோடிட்ட இடத்தை நிரப்புக :
1.மேதினியின் மற்றொருபெயர்..........
விடை: உலகம்
2.உள்ளப்பூட்டு என்னும் சொல்லின் பெயர்
விடை: உள்ளத்தின் அறியாமை
3. கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ள பாடல்....
விடை: தமிழ்க்கும்மி
0 Comments