ஏழாம் வகுப்பு தமிழ்

இயல் 1

கவிதைப் பேழை

ஒன்றல்ல இரண்டல்ல

Bright Zoom Tamil,

ஏழாம் வகுப்பு தமிழ்

இயல் 1

கவிதைப் பேழை

ஒன்றல்ல இரண்டல்ல

ஆசிரியர் குறிப்பு :

ஆசிரியர் : 

உடுமலை நாராயணகவி 

இயற்பெயர் : 

நாராயணசாமி

காலம் : 

25.9.1899-23.5.1981

சிறப்புப்பெயர்: 

பகுத்தறிவுக் கவிராயர்

பணி: 

தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்

சிறப்புகள் : 

கலைமாமணி பட்டம், 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. உடுமலைப் பேட்டையில் சிலை மற்றும் மணிமண்டபத்தைத் தமிழக அரசு நிறுவியுள்ளது.


சொல்லும் பொருளும் :

1.ஒப்புமை - இணை

2.அற்புதம் - வியப்பு

3. முகில் - மேகம்

4. உபகாரி - வள்ளல்

5.சொல்ல - கூற

6.தென்றல் - தெற்கிலிருந்து வீசும் காற்று

7.கவி - கவிஞன் (அ) புலவன்

8, அருள் - இரக்கம்

பாடநூல் மதிப்பீட்டு வினா :

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்

அ) கலம்பகம்

ஆ) பரிபாடல் 

இ) பரணி

ஈ) அந்தாதி

விடை : இ) பரணி


2. வானில் கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

அ) அகில் 

ஆ) முகில் 

இ) துகில்

ஈ) துயில்

விடை : ஆ) முகில்


3. 'இரண்டல்ல' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) இரண்டு + டல்ல

ஆ) இரண் + அல்ல 

இ) இரண்டு + இல்ல

ஈ) இரண்டு + அல்ல

விடை : ஈ) இரண்டு + அல்ல


4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) தந்து + உதவும்

ஆ) தா + உதவும்

இ) தந்து + தவும்

ஈ) தந்த + உதவும்

விடை : அ) தந்து + உதவும்


5. ஒப்புமை – இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்

அ) ஒப்புமை இல்லாத

ஆ) ஒப்பில்லாத 

இ) ஒப்புமையில்லாத

ஈ) ஒப்புஇல்லாத

விடை : இ) ஒப்புமையில்லாத


சிறுவினா: 

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை? 

★ தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கமழும்.

★ சுவைமிகுந்த பழங்களும் தங்கம் போன்ற தானியக் கதிர்களும் விளையும். 

★ தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.


2. 'ஒன்றல்ல இரண்டல்ல' - பாடலில் இடம்பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.

முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.

" புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.


சிறுவினா :

1. தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

★ பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.

★ பரிபாடல், கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் - ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்.


சிந்தனை வினா :

1. தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன? 

★ சங்ககாலத்தின் இறுதிப்பகுதி ஆடம்பரமும் ஆரவாரமும் மிக்கது.

★ கலை என்ற பெயரில் ஒழுக்கக்கேடுகள் தலைதூக்கின.

★ தமிழகத்தின் அகப்புற ஒழுக்கங்கள் பாதுகாக்கப்படாமல் ஒதுக்கப்பட்டன.

★ குழப்பமான அச்சூழலில் நீதியும் அறமும் தேவைப்பட்டது.

★ எனவே, தமிழில் அறஇலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றின.


கூடுதல் வினா :

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம்

அ) பரிபாடல்

ஆ) பரணி

இ) சங்க இலக்கியங்கள்

ஈ) திருக்குறள்

விடை : ஆ) பரணி


2. பொருத்துக.

1.பகைவரை வென்றதைப் பாடுவது

-  அ) பரிபாடல்

2.இசைப்பாடல்  - ஆ) பரணி

3. வான்புகழ் கொண்டது - இ) சங்க இலக்கியம்.

4. அகம், புறம் மெய்ப்பொருளாகக் கொண்டது -  ஈ) திருக்குறள்

அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ

ஆ) 1.ஈ 2.அ 3.ஆ 4.இ 

இ) 1.ஆ 2.அ 3.இ 4.ஈ

ஈ) 1.அ 2இ 3.ஆ 4.ஈ

விடை : அ) 1.ஆ 2.அ 3.ஈ 4.இ


3. பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர்

அ) பாரதியார் 

ஆ) கவிமணி

இ) சுரதா

ஈ) உடுமலை நாராயணகவி 

விடை  : ஈ) உடுமலை நாராயணகவி


4. தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பியவர்


அ) பாரதியார் 

ஆ) கவிமணி

இ) சுரதா

ஈ) உடுமலை நாராயணகவி 

விடை : ஈ) உடுமலை நாராயணகவி


5. தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக எழுத்தாளராகவும் புகழ்பெற்ற கவிஞர்?

அ) பாரதியார்

ஆ) கவிமணி

இ) சுரதா

ஈ) உடுமலை நாராயணகவி 

விடை : ஈ) உடுமலை நாராயணகவி


6. முல்லைக்குத் தேர் தந்து புகழ்பெற்றவன் 

அ) வேள்பாரி

ஆ) குமணன் 

இ) அதியமான்

ஈ) பேகன்

விடை : அ) வேள்பாரி


7. புலவரின் சொல்லுக்காசுத் தன் தலையையே தரத் துணிந்தவன் 

அ) வேள்பாரி

ஆ)குமணன் 

இ) அதியமான்

ஈ) பேகன்

விடை : அ) வேள்பாரி