ஆறாம் வகுப்பு தமிழ்

மதல் பருவம் 

மனப்பாடப்பகுதி

இன்பத்தமிழ்

Bright Zoom Tamil,

இன்பத்தமிழ்

தமிழுக்கும் அமுதென்றுபேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

                                            - பாரதிதாசன்


சிலப்பதிகாரம்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் 

கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்றுஇவ்

அங்கண் உலகு அளித்த லான்

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலம் திரிதலான் 

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்

                                        - இளங்கோவடிகள்


காணி நிலம்

காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும் - அங்குத்

தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்

துய்ய நிறத்தினதாய் - அந்தக்

காணி நிலத்திடையே - ஓர் மாளிகை

கட்டித் தரவேண்டும் - அங்குக்

கேணி அருகினிலே- தென்னைமரம்

கீற்றும் இளநீரும்

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்

 பக்கத்திலே வேணும்.

                                         -  பாரதியார்

திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

 பகவன் முதற்றே உலகு..


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

 உள்நின்று உடற்றும் பசி.


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே 

எடுப்பதூஉம் எல்லாம் மழை.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 

செயற்கரிய செய்கலா தார்.


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு. 


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.


பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

 அணியல்ல மற்றுப் பிற


இனிய உளவாக இன்னாத கூறல் 

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.


-திருவள்ளுவர்