6 ஆம் வகுப்பு தமிழ் 

முதல் பருவம் 

இயல் ஒன்று 

தமிழ்த்தேன்

1.கவிதைப்பேழை 

இன்பத்தமிழ்



6 ஆம் வகுப்பு தமிழ் இன்பத்தமிழ்

சொல்லும் பொருளும்


1. நிருமித்த - உருவாக்கிய

2. விளைவு - விளைச்சல்

3. சமூகம் - மக்கள் குழு

4. அசதி - சோர்வு


நூல் வெளி :

★ பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.

★  பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயைரப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

★ தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகைள உள்வாங்கிப் பாடியுள்ளார்.

★ எனேவ, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.

★  இவைரப் பாவேந்தர் என்றும் போற்றுவர்.


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1.ஏற்றத் தாழ்வற்ற ------ அமைய வேண்டும்.

அ). சமூகம்

ஆ). நாடு

இ). வீடு

 ஈ).  தெரு

விடை :அ). சமூகம்


2.நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ----ஆக இருக்கும்

அ).மகிழ்ச்சி

ஆ).கோபம்

இ ).  வருத்தம்

ஈ ).அசதி

விடை :ஈ).அசதி


3.நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

அ).  நிலயென்று

ஆ). நிலவென்று

இ).  நிலவன்று

ஈ ).  நிலவுஎன்று

விடை :ஆ). நிலவென்று


4.தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

அ).  தமிழங்கள்

ஆ). தமிழெங்கள்

இ).  தமிழுங்கள்

 ஈ).  தமிழ்எங்கள்

விடை :ஆ). தமிழெங்கள்


5.அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ). அமுது + தென்று

ஆ). அமுது + என்று

இ) . அமுது + ஒன்று

ஈ).   அமு + தென்று

விடை :ஆ). அமுது + என்று


6.செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ). செம்மை + பயிர்

ஆ).செம் + பயிர்

இ). செமை + பயிர்

ஈ) .  செம்பு + பயிர்

விடை : அ) .செம்மை + பயிர்


7.இன்பத்தமிழ் பாடலின் கருத்துக்கு ஏற்றபடி பொருத்துக.

அ). விளைவுக்கு - பால்

ஆ). அறிவுக்கு - வேல்

இ). இளமைக்கு - நீர்

ஈ). புலவர்க்கு - தோள்

விடை : இ),ஈ),அ),ஆ),