வேலூர் கோட்டையை கட்டியது யார்?

Who built the Vellore Fort?

Bright Zoom Tamil,

வேலூர் கோட்டையை கட்டியது யார்..!

★ வேலூர் கோட்டை 14 -16. ஆம் நூற்றாண்டில்  விஜய நகர பேரரசின் ஆட்சிக் காலத்தில் குச்சி பொம்மு நாயக்கரால்  136 ஏக்கர் பரப்பளவில் இக்கோட்டை கட்டப்பட்டது.

★ இது கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது.

★ இதன் அழகிய மதில்கள், சுற்றியுள்ள அகழியும் உறுதி யான கல் கட்டமைப்புக்குப் பெயர் பெற்றது. 

★ 191 அடி அகலமும் 20 அடி ஆழமும்கொண்ட அகழியோடு கூடிய கோட்டையின் நுழைவு வாயில் கிழக்குப் பக்கம் உள்ளது.

★  இதில் வெளி மதில்சுவர் உள் மதில்சுவர் என 2 சுற்றுச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

★ வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம் 1485-இன் திறந்து வைக்கப்பட்டது. 

★ கோட்டைக்குள் உள்ள ஜலகண் டேஸ்வரர் கோயில் 1566 பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது.

★  17-ஆம் நூற்றாண்டின் இறுதியில்  ஆற்காடு  நவாப் கட்டுப்பாட்டில் இக்கோட்டை வந்தது.

★ முகமதியர்களின் ஆட்சிக்குப் பின்னர் இக்கோட்டை ஆங்கி லேயர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.

★  கோட்டையில்  திப்புமஹால் ஹய்தர் மஹால், பாஷா மஹரால், பேகம் மஹால், கண்டி மஹால் என  5 சிறிய அரண்மனைகள் உள்ளன.

★ இக்கோட்டை நாயகர்களிடம் இருந்து பீஜப்பூர் சுல்தானுக்கும் பின்னர் மராட்டியருக்கும் தொடர்ந்து நவாப்புகளுக்கும், இறுதியாக ஆங்கிலேயர் களுக்கும் கைமாறியது. 

★ திப்பு சுல்தான் குடும்பத்தினர் இச்கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்,

★ இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் சிப்பாய் புரட்சி 1896-இல் வேலூர் கோட்டையில் தான் நடைபெற்றது.

★ இலங்கையிலுள்ள கண்டியை ஆண்ட கடைசி தமிழ் மன்னர் விக்கிரம ராஜசிங்கள் ஆங்கிலேயரால் 1815 இல் தேர்கடிக்கப்பட்டார், அப்போது அவரையும் அவரது குடும்பத் தாரையும் வேலூர் கோட்டையில் சிறைவைத்தனர்.

★ வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே முத்துமண்டபம் பகுதியில் விக்கிரம ராஜசிங் கனின் நினைவிடம் உள்ளது.


★ இதனுள் தொல்லியல் கலைப்பொருட்கள், சிற்பங்கள், நாணயங்கள், கைவினைப் பொருட்கள் ஆயுதங்கள்  முதலியவை உள்ளன.

★ இந்த கோட்டைக்குள் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக இந்து மதத்திற்குரிய ஜலகண்டேஸ்வரர் கோயில், கிறித்துவ தேவாலயம், முஸ்லிம்களின் வழிபாட்டுக்கு மசூதி ஆகியவை உள்ளன.

★ ஆங்கிலேயர்களின் ஆட்சியில் 1846ல் புனித ஜான்  கிறித்துவ  தேவாலயம் கோட்டையில் கட்டப்பட்டது

★ கோட்டையில் உள்ள உலமண்டேஸ்வரர் கோயிலில் தெற்கு நோக்கி ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் அமைந்துள்ளது. 

★ கோயிலின் வலது புறத்தில் குளமும், இடது பரத்தில் பண்டபமும் உள்ளது. 

★ கோயிலில் உள்ள தூண்களில் கண்ணைக் கவரும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

★ கோட்டையின் வெளிப்புறம் கோட்டைமைதானம் உள்ளது இதில்  பல அரசியல் கட்சி தவைவர்கள் கலந்து கொண்டு பேசியுள்ளனர். 

★ கோட்டையில் உள்ள பூங்காவில் நாள்தோறும் ஆயிரக்கணக்காண மக்கள் பொழுது போக்க பயன் படுகிறது.

★ பழமை மாறாமல் உள்ள இக்கோட்டை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டு செல்கினானர். 

★ வரவாற்று சிறப்பு மிக்க வேலூர் மாநகரின் பெருமைக்கு வேலூர் கோட்டையே சாட்சியாகும்.

★ இக்கோட்டை இப் போது தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

★  கோட்டையில் பல்வேறு அரசு அலுவலகங்கள் செயன்பட்டு வந்தன. 

★ தற்போது காவலர் பயிற்சி பள்ளி, அருங்காட்சியகம் போன்றவைகள் செயல்பட்டு வருகின்றன.