பட்டினப்பாலை பற்றிய சில தகவல்கள்.
பாடியவர் :
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
பாடப்பட்டவன் :
திருமாவளவன் (கரிகாற் பெருவளத்தான்)
திணை – பாலை
துறை – செலவழுங்குதல்
பாவகை – ஆசிரியப்பா, வஞ்சி
மொத்த அடிகள் – 301
★ இப்புலவர் தொண்டைமான் இளந்திரையனுக்காகப் பெரும்பாணாற்றுப்படையை எழுதியவர்.
★ பொருநராற்றுப்படை சோழன் கரிகாலனுக்காக முடத்தாமக் கண்ணியாரால் எழுதப்பட்டது.
★ நச்சினார்க்கினியர் உரை: இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத் திணையாகலின், இதற்கு பட்டினப்பாலையென்று பெயர் கூறினார்.
★ பாலையாவது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் கூறுவது.
★ இப்பாட்டு வேற்று நாட்டு அகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவு அழுங்கிக் கூறியது.
★ காவிரியின் பெருமையைப் பற்றி சிறப்பித்து கூறும் பத்துப்பாட்டு நூல் “பட்டினப்பாலை”
★ மருதநிலத்தின் வளமையை நிலையாக கூறும் நூல் “பட்டினப்பாலை”
★ காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வ செழிப்பு களை மிகுதியாகக் கூறும் பத்துப்பாட்டு நூல் “பட்டினப்பாலை”
★ கரிகால் பெருவளத்தான் இன் வீரச் செயல்களை பற்றி விரிவாய் கூறும் நூல் “பட்டினப்பாலை”
★ கரிகால் பெருவளத்தான் உறையூர் ஐ வளப்படுத்திய வரலாற்று இடம்பெறும் நூல்
“பட்டினப்பாலை”
★ காவிரிப்பூம்பட்டினத்தை பற்றிய வரலாற்றுக் களஞ்சியம் எனும் சிறப்பித்துப் போற்றபபடும் பத்துப்பாட்டு நூல் “பட்டினப்பாலை”
★ பட்டினப்பாலை என பெயர் வரக் காரணம் “பட்டினத்தில் (காவிரிப்பூம்பட்டினத்தின்) சிறப்பைக் கூறும் பாலைத்திணை செய்யுள் என்பதால் பட்டினப் பாலை எனப் பெயர் பெற்றது”
★ பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் “சோழன் கரிகால் பெருவளத்தான் (திருமாவளவன்)
★ பட்டினப்பாலையின் பாடலாசிரியர் “கடியலூர் உருத்திரங்கண்ணனார்”
★ பட்டினப்பாலை அடிவரையரை “301 அடிகள்”
★ பட்டினப்பாலை ஒரு “அகப்பொருள் நூல் ஆகும்”
★ பட்டினப்பாலையின் பாவகை சிறப்பு “இடையிடையே வஞ்சிப்பா அடிகள்விரவி வர ஆசிரியப்பாவால் பாடப்பட்டது”
★ பட்டினப்பாலை உணர்த்தும் திணை “பாலைத் திணை”
★ பாலைத் திணையின் சிறப்பு
“பிரிதலும் பிரிதல் நிமித்தமும்”
★ பட்டினப்பாலையின் பாலைத் திணையின் பாடல் விளக்கம் “தலைவியைப் பிரிந்து செல்ல நினைத்த தலைவன் தன் மனைவியைப் பிரிய மனமின்றி தன் நெஞ்சத்திற்கு காரணத்தையும் கூறுவதையம் பிரிதலை தவிர்ப்பதாலும் அமைந்த திணை பாலைத் திணை”
★ பட்டினப்பாலையில் இடம்பெறும் அகப்பொருள் விளக்கம் “செலவழுங்கல் என அர்த்தம்”
★ பட்டினப்பாலை நூலைக் குறித்து கலிங்கத்துப்பரணி எவ்வாறு விவரிக்கின்றது “கரிகால் பெருவளத்தான் பட்டினபாலை பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது”
★ பட்டினப்பாலைைை அரங்கேற்றப்பட்ட மண்டபம் “பதினாறு கால் மண்டபம்”
★ பட்டினப்பாலையின் வேறு பெயர்கள் “பாலை பாட்டு” “வஞ்சி நெடும்பாட்டு”
0 Comments