தமிழனின் நீர்நிலைகள்..!


Water bodies of Tamil


"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்"
தொல்காப்பியம்- மரபியல் -1589

விளக்கம்: 

★ இந்த உலகம் நிலம், தீ, நீர், காற்று, வானம் என்ற ஐம்பூதங்களின் கலவைதான்.

★ அன்றே அறிவியல் விஞ்ஞானி தொல்காப்பியர் புவியை அராய்ச்சி செய்து அனைத்தையும் எழுதியுள்ளார்.

★  அவருக்கு நிகரான ஒரு விஞ்ஞானி இனி பிறக்கப்போவதில்லை.

★ இயற்கையின் உயிருக்கு அச்சாணியாக விளங்கும் நீரை நமது முன்னோர்கள் உயிர்க்கு மேலாகக் கருதி அதைப் பாதுகாத்து வளர்த்தார்கள்.

அதன் வழியே பல ஆராய்ச்சிகள் செய்து தேவைக்கேற்ப, நிலத்திற்கேற்ப பல நீர்நிலைகளை வடிவமைத்து செழிப்போடு வாழ்ந்தவன் நம் தமிழன்

உயிர் ஊட்டும் நீரை காப்பதற்கு தமிழன் வரையறுத்துள்ள நீர்நிலைகளை இங்கு காண்போம்.

1. அகழி – (Moat)  

கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

2. அருவி – (Water fall) 

மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

3. ஆழிக்கிணறு – (Well in Seashore)

கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

4. ஆறு – (River) பெருகி ஓடும் நதி.

5. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

6. உறை கிணறு -(Ring Well) மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

7. ஊருணி -(Drinking water tank) மக்கள் பருகும் நீர் நிலை.

8. ஊற்று – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

9. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. ஓடை (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11. கட்டுந் கிணக்கிணறு (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. கடல் – (Sea) சமுத்திரம்.

13. கம்வாய் (கம்மாய்) -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. கலிங்கு – (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் – (Channel) நீரோடும் வழி.

16. கால்வாய் – (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. குட்டம் – (Large Pond) பெருங் குட்டை.

18. குட்டை – (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. குண்டம் – (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. குண்டு – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. குமிழி ஊற்று – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

24. குளம் – (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

25. கூவம் – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

26. கூவல் – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

27. வாளி (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

28. கேணி –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

29. சிறை – (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

30. சுனை – (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

31. சேங்கை – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

32. தடம் – (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

33. தளிக்குளம் – (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

34. தாங்கல் – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

35. திருக்குளம் – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

36. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

37. தொடு கிணறு – (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

38. நடை கேணி – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

39. நீராவி – (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.

40. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

41. பொங்கு கிணறு – (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

42. பொய்கை – (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

43. மடு – (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

44. மடை – (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

45. மதகு – (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

47. மறு கால் – (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

48. வலயம் – (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

49. வாய்ககால் – (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.


மேலும் சில குறிப்புக்கள்:

ஏர்த்தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை 
#ஏரி 
தத்தனேரி
சிலையனேரி
உலகனேரி
தோடனேரி
தூயனேரி
சேந்தனேரி கட்டிக்கள்ளூர்
உலகளந்த சோழப்பேரேரி
கலியனேரி
உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை "ஊருணி"

வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நீர்நிலை “ஏந்தல்”

குளிர்ப்பதற்கு பயன்படும் நீர்நிலை:

மாடக்குளம் 
தெப்பக்குளம்
சொக்கிகுளம்
ஆத்திகுளம்
ஆலங்குளம்
கோசாகுளம்
சம்பக்குளம்
மருதங்குளம் 
செங்குளம்
கரிசல்குளம்
புளியங்குளம்
வேடர்புளியங்குளம்
கொங்கர்புளியங்குளம்
தணக்கன்குளம் மாங்குளம்
நாகனாகுளம் வலையங்குளம்
முதலைக்குளம் ஊர்மெச்சிகுளம்
ஊமச்சிகுளம் கட்டக்குளம்
கொக்குளம்
அய்யனார்குளம்

நீர் நிலைகளின் தமிழ்ப்பெயர்கள்:
நீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் தமிழர்கள் அழைத்து வந்துள்ளனர்.

குளம் (குளிப்பதற்காக அமைக்கப்பட்டவை)
ஏரி (ஏர் தொழிலுக்காக {பயிர்ச் செய்கை) அமைக்கப்பட்டவை)
ஊருணி (ஊரார் உண்ணுவதற்காக {சுத்தமான குடிநீர்த் தேவைக்காக)
பொய்கை (மலர் நிறைந்த நீர் நிலை)
மடு கேணி (ஆலயங்களுக்கு அருகாமையில் அமைந்த நீர் நிலை)
மோட்டை
அள்ளல்
கிணறு
துரவு (தோட்டஞ் செய்வதற்காககத் தோண்டப்பட்டவை)
தடாகம் அல்லது வாவி
ஓடை
அளக்கர் (அளக்க முடியாத நீர் நிலை- கடல்)
அசம்பு (உள்நாட்டில் காணப்படும் கழிமுகம் அல்லாத நீர்கோர்த்த களிமண் நிறைந்த சேற்று நிலம் )
அள்ளல் (சேறு பொருந்திய நீர் பள்ளம்)
அகழி – கோட்டைக்கு வெளியே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.(ஆழமான நீர் கொண்ட பாதுகாப்பான இடம்)
அயம் – அருவி கொட்டுமிடத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் நீர்நிலை.
ஆழிக்கிணறு (தற்போது இது நாழிக்கிணறு என்று அறியப்படுகிறது) – கடலருகே தோண்டி கட்டிய கிணறு. தமிழகத்தின் திருசெந்தூரில் இவ்வாறான நீர் நிலை தற்போதும் உள்ளது.
இலஞ்சி – பலவகையான பயன்பாட்டிற்காக தேக்கப்படும் நீர்.
கயம் – சமவெளியில் ஆறு பாய்ந்து நிரம்பும் நீர்நிலை.
கழி – உப்பங்கழி, கடல்நீர் பாய்ந்து தேங்கிய நீர்நிலை.
சுனை – மலைப்பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கும் நீர்நிலை.(சிறிதளவு நீருள்ள பள்ளம்)
மடு – சமநிலத்தில் ஆறு பாயும்போது ஒதுங்கும் அதிமெல்லோட்ட நீர்நிலை.
குட்டை – குடிநீருக்காக இன்றி வளர்ப்பு விலங்குகளைக் குளிப்பாட்டுவதற்காகத் தேக்கப்படும் நீர்.
கூவல் – கிணறுபோன்ற நீர் தேக்கம். ஆனால் ஆழமற்றது.
தருவை – பெரிய ஏரி

"பைதுஅற வெம்பிய கல்பொரு பரப்பின்
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து
அருவி ஆன்ற உயர்சிமை மருங்கில்" - (அகம் - 185 : 8-10)

பசுமை விலகிப்போன வறண்ட நிலத்தில், அதிக வெப்பம் காரணமாக மேகம் மழைப் பொழிவதை நிறுத்திவிட்டு வேறு இடத்திற்கு சென்று விடும். 
இதனால் உயர்ந்த சிகரங்களில் பொழியும் அருவிகள் கூட உருவாகாமல் நின்றுவிடும்.

இயற்கை மனிதரால் காப்பாற்றப்படுவதில்லை. இயற்கைதான், நாம் வாழ்வதற்கு வழியைக் கொடுத்து அனைத்து உயிரினினங்களையும் காப்பாற்றுகிறது. அதனால் இயற்கையை சிதைக்கும் செயல்களை நிறுத்திவிட்டு, அதனை சரிசெய்வதற்கு  நம் முன்னோர்கள் வகுத்துவிட்டுச் சென்ற வழிமுறைகளை செயல்படுத்தி மீண்டும் இயற்கையோடு வாழ்வோம்.

வாழ்க இயற்கையன்னை! வாழ்க தமிழ்!