தமிழ் தாய் வாழ்த்து பாடிய மனோன்மணீயம் பெ. சுந்தரனார்..! 

Manonmaniam Sundaram Pillai..!

Bright Zoom Tamil,


தமிழ் தாய் வாழ்த்து பாடிய மனோன்மணீயம் பெ. சுந்தரனார்..! 

★ மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக நூலைப் படைத்த மனோன்மணீயம் பெ. சுந்தரனார் பற்றி தெரிந்து கொள்ளல்லுங்கள்...!

இயற்பெயர் : 

மனோன்மணீயம் பெருமாள் சுந்தரனார்

பிறப்பு : 

4 ஏப்ரல் 1855

பிறந்த இடம் : 

ஆலப்புழா, கேரளா, இந்தியா

இறப்பு : 

26 ஏப்ரல் 1897 (அகவை 42)

தேசியம் : 

இந்தியர்

பணி : 

எழுத்தாளர்

பெற்றோர் : 

பெருமாள் ,மாடத்தி அம்மாள்.

வாழ்க்கைத் துணை : 

சிவகாமி அம்மாள்.


வாழ்க்கைக் குறிப்பு :

★ இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும் 1855-ஆம் ஆண்டு சுந்தரனார் பிறந்தார்.

★ இளமையிலேயே தேவார திருவாசகங்களையும் சமய வழிபாட்டு நூல்களையும் கற்றார்.

★  இவருக்குத் தமிழாசிரியராக விளங்கியவர் நாகப்பட்டினம் நாராயணசாமி. இவரிடமே மறைமலை அடிகள் தமிழ் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

★  1876-ஆம் ஆண்டு பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டில் சிவகாமி அம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்தார்.

★ ஆசிரியப் பணி 1877 இல் தனது ஆசிரியப் பணியை ஆரம்பித்தார். 

★ திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச்சாலையின் தலைவராக இரண்டாண்டுகள் பணியாற்றி, அக்கல்விச் சாலையே பின்னர் இந்துக் கல்லூரியாக உயர்வதற்கு உறுதுணையாக இருந்தார்.

★  பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியராகச் சேர்ந்தார். 

★ 1880 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார். 

★ அக்கல்லூரியில் தத்துவத்துறைப் பேராசிரியராக இருந்த முனைவர் ஹார்வித் துரையின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது.

★ மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய பின்பு திருவனந்தபுரம் அரசர் அரண்மனை வருவாய்த் துறையின் தனி அலுவலராக (Commissioner of Separate Revenue) நியமிக்கப்பட்டார். 

★ 1885 இல் டாக்டர் ஹார்வித் துரை பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது சுந்தரனாரைத் தம் பதவிக்குப் பரிந்துரைத்தார்.

★  இதனை ஏற்று மீண்டும் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தத்துவத்துறையின் தலைமைப் பேராசிரியரானார்.

★  அப்பணியை அவர் இறுதிவரையில் திறம்படத் தாங்கினார். 

★ 1878 இல் தாயாரையும், 1886 இல் தந்தையையும் இழந்தார்.

★  இவருடைய மகன் நடராசன் பின்னாளில் கேரள அரசில் அமைச்சராகவும் இருந்தார்.


தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்

நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில்

தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே !

உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !

வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே !

பொருள் :

அலை கடலே ஆடையான  இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து,செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்...!