TNPSC பொதுதமிழ் 2022..!

பெரியபுராணம் பற்றிய முக்கிய குறிப்புகள்..!

Bright Zoom Tamil,


பெரியபுராணம் :

ஆசிரியர் குறிப்பு:

◆ பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.

◆ இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர்.

◆ இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.

◆ இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர்.

◆ இவர் உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்.

◆ இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர்.

◆ இவரின் காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.


நூல் குறிப்பு:

◆ தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர்.

◆ அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் “பெரியபுராணம்” என்னும் பெயர் பெற்றது.

◆ இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் “திருத்தொண்டர் புராணம்” என்பதாகும்.

◆ தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்” என்று அடியெடுத்த்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர்.

◆ மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்கிறார்.

◆ உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், “பெரியபுராணம்” என்பார் திரு.வி.க.