TNPSC பொதுதமிழ் 2022..!
பெரியபுராணம் பற்றிய முக்கிய குறிப்புகள்..!
Bright Zoom Tamil,
பெரியபுராணம் :
ஆசிரியர் குறிப்பு:
◆ பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.
◆ இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர்.
◆ இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
◆ இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர்.
◆ இவர் உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்.
◆ இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர்.
◆ இவரின் காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
◆ தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர்.
◆ அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் “பெரியபுராணம்” என்னும் பெயர் பெற்றது.
◆ இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் “திருத்தொண்டர் புராணம்” என்பதாகும்.
◆ தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்” என்று அடியெடுத்த்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர்.
◆ மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்கிறார்.
◆ உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான், “பெரியபுராணம்” என்பார் திரு.வி.க.
0 Comments