இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..!
Today is World Sparrow Day ..!
சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும்..!

Bright Zoom Tamil,

★ ஒவ்வொரு ஆண்டும் உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

★ நவீன கட்டிட அமைப்பு, தேவைக்கு குறைவான தானியங்கள், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்கப்படுதல், நிலம் மற்றும் நீர் மாசு காரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகவே, சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும்..!!

★  உழவனின் நண்பன் மண்புழு என்பது தெரிந்தது. சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் உழவனின் உற்ற தோழர்கள் என்பது பலரும் அறியாத ஒன்று.


★ மண்புழுக்கள் தென்னை மரங்களின் வேர்ப்பகுதிக்குள் துளை போட்டு, மேலும் கீழும் சென்று வாழும் குணம் கொண்டது. இதனால் பூமியின் கெட்டித்தன்மை குறைகிறது.


★ பூமிக்குள் காற்று புகும். நீரும் செல்லும். அதனால் வேர்கள் சுவாசிக்க காற்றும், தண்ணீரும் தடையின்றி பூமிக்குள் புகுந்து வேர்களுக்கு கிடைக்கிறது.


★ நெல், வாழை, கரும்பு, தென்னை, மா, பலா மற்றும் புல், பூண்டு, பயிர்களும் சுவாசிக்க தேவையான காற்று, பூமிக்குள் செல்ல மண்புழுக்கள் உழுது கொடுத்து உதவுகிறது.


★ நெல், எள், கொள்ளு, கடலை, மக்காச்சோளம் என அனைத்து வேளாண் பயிர்களையும் புழு பூச்சிகளிடமிருந்து பாதுகாத்து மகசூல் பெருக செய்வதில் பறவைகளின் பங்களிப்பு மிக முக்கியம். அதில் பெரும் பங்கு வகிப்பது, சிட்டுக்குருவிகளே.


★ சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் பகல் முழுவதும் வேகமாக பறந்து சென்று தாய் அந்து பூச்சிகளை பிடித்து தின்று வாழ்கின்றன.


★  வயல்களில் கூடுகட்டி குடும்பமாக வாழ்ந்து புழு, பூச்சிகளை வேட்டையாடும்.


★  வயல் அறுவடை காலத்திற்கு முன், சிட்டுகுருவிகள் முட்டையிட்டு தன் இனத்தை 90 முதல் 100 நாட்களுக்குள் பெருக்கி கொள்ளும்.


★ மொத்த சிட்டுக்குருவிகளும் நெற்பயிர்களில் ஊடுருவி தின்று அழிக்கும் புழுக்களை பிடித்து தின்று ஒட்டு மொத்தமாக அழிக்கும்.


★ தாய் அந்து பூச்சிகளை பறந்து பாய்ந்து பிடித்து தின்று பயிர்களை பாதுகாக்கும்.


★ தென்னை, பனை, ஈச்சை மரங்களில் தொங்குகிற கூட்டில் சிட்டுக்குருவி குடும்பத்தை சேர்ந்த தூக்கணாங்குருவிகள் வாழ்கிறது. 


★ மனித வாழ்க்கை வளம் பெறவும், பசி, பட்டினி தீர உணவு தானிய உற்பத்தி பெருகவும், இயற்கை படைத்து கொடுத்த அற்புத பறவையாக சிட்டுக்குருவியும், தூக்கணாங்குருவியும் இருந்து வருவது இயற்கையின் வரப்பிரசாதம் என்றால் அது மிகையாகாது.