சிலப்பதிகாரம்
Cilappatikaram
TNPSC Group IV - Study Materials
பகுதி ஆ இலக்கியம்
சிலப்பதிகாரத்தின் உருவம்:
ஆசிரியர் : இளங்கோவடிகள்
காலம் : கி.பி.2 ஆம் நூற்றாண்டு
அடிகள் : 5001
காதைகள் : 3
காண்டங்கள் : 3
பாவகை : நிலைமண்டில ஆசிரியப்பா
சமயம் : சமணம்
உரைகள்:
★ அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.
★ அடியார்க்கு நல்லாரின் உரை
★ ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை
ஆசிரியர் குறிப்பு:
பெயர் : இளங்கோவடிகள்
பெற்றோர் : இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை
அண்ணன் : சேரன் செங்குட்டுவன் இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில தங்கினார்.
நூலின் வேறு பெயர்கள்:
★ தமிழின் முதல் காப்பியம்
★ உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
★ முத்தமிழ்க்காப்பியம்
★ முதன்மைக் காப்பியம்
★ பத்தினிக் காப்பியம்
★ நாடகப் காப்பியம்
★ குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
★ புதுமைக் காப்பியம்
★ பொதுமைக் காப்பியம்
★ ஒற்றுமைக் காப்பியம்
★ ஒருமைப்பாட்டுக் காப்பியம்
★ தமிழ்த் தேசியக் காப்பியம்
★ மூவேந்தர் காப்பியம்
★ வரலாற்றுக் காப்பியம்
★ போராட்ட காப்பியம்
★ புரட்சிக்காப்பியம்
★ சிறப்பதிகாரம்(உ.வே.சா)
★ பைந்தமிழ் காப்பியம்
நூல் அமைப்பு:
காண்டங்கள் : 3
1.புகர் காண்டம்,
2. மதுரைக் காண்டம்,
3. வஞ்சிக் காண்டம்
காதைகள் : 30
முதல் காதை :
மங்கள வாழ்த்துப் பாடல்
இறுதி கதை :
வரந்தருகாதை புகார் காண்டம்
புகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10
★ முதல் காதை = மங்கள வாழ்த்துப் பாடல் காதை
★ பத்தாவது காதை = நாடுகாண் காதை
மதுரைக் காண்டம்:
★ மதுரைக் காண்டத்தில் உள்ள காதை = 13
★ 11வது காதை = காடுகாண் காதை
★ 23வது காதை = கட்டுரைக் காதை
வஞ்சிக் காண்டம்:
★ வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதை = 7
★ 24வது காதை = குன்றக்குரவை காதை
★ 30வது காதை = வரந்தருகாதை
நூல் எழுந்த வரலாறு:
★ மலைவளம் காண சென்ற இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், சீத்தலை சாத்தனார் ஆகியோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர்.
★ சீத்தலை சாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறி, அக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார்.
★ சீத்தலைச் சாதனார், இளங்கோவடிகளை “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக” என வேண்டிக்கொண்டார்.
★ இளங்கோவடிகளும், “நாட்டதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்” எனக் கூறி சிலப்பதிகாரத்தை படைத்தார்.
நூல் கூறும் மூன்று உண்மைகள்:
★ ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்
★ அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
★ உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர்
கதை மாந்தர்கள்:
★ கோவலனின் தந்தை மாசாத்துவான்
★ கண்ணகியின் தந்தை மாநாய்கன்
★ கோவலனின் தோழன் மாடலன்
★ கண்ணகியின் தோழி தேவந்தி
★ மாதவியின் தோழி சுதமதி,
★ வயந்தமாலை
★ கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் = மணிமேகலை
★ கண்ணகி கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன்
★ கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம்(குமுளி)
★ சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்.
சிறப்புகள்:
★ “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என பாரதியார் கூறுகிறார்.
★ “சிலபதிகாரச் செய்யுளைக் கருதியும்........தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்” என கூறுகிறார் பாரதியார்.
★ “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை” என்றார் பாரதியார்.
★ “முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்” – மு.வரதராசனார்.
★ பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்
மேற்கோள்:
★ மாசறு பொன்னே, வலம்புரி முத்தே காசறு விரையே, கரும்பே, தேனே அரும்பெறல் பாவாய், ஆருயிர் மருந்தே பெருங்குடி வாணிகன் பெருமட மகளே இந்தணை மகளிர்க்கு இன்றியமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம்
★ பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுகத்துக்குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
தேடல் தொடர்பான தகவல்கள் :
சிலப்பதிகாரத்தின் உருவம் , சிலப்பதிகார உரைகள், ஆசிரியர் குறிப்பு ,நூலின் வேறு பெயர்கள் ,நூல் அமைப்பு ,புகார் காண்டத்தில் உள்ள காதைகள் , மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் , நூல் எழுந்த வரலாறு , நூல் கூறும் மூன்று உண்மைகள்,கதை மாந்தர்கள் , சிறப்புகள் , மேற்கோள்,..

0 Comments