சிலப்பதிகாரம் 

Cilappatikaram

TNPSC Group IV - Study Materials

பகுதி ஆ  இலக்கியம்

சிலப்பதிகாரம் பற்றிய தகவல்..!

Bright Zoom Tamil,

Bright Zoom Tamil


சிலப்பதிகாரத்தின் உருவம்:

ஆசிரியர் : இளங்கோவடிகள்

காலம் :  கி.பி.2 ஆம் நூற்றாண்டு

அடிகள் :  5001

காதைகள் : 3

காண்டங்கள் : 3

பாவகை : நிலைமண்டில ஆசிரியப்பா

சமயம் :  சமணம்


உரைகள்:

★ அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதியவர் அரும்பத உரைகாரர்.

★ அடியார்க்கு நல்லாரின் உரை

★ ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை


ஆசிரியர் குறிப்பு:

பெயர் : இளங்கோவடிகள்

பெற்றோர் : இமயவரம்பன்

நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை

அண்ணன் : சேரன் செங்குட்டுவன்   இவர் இளமையிலே துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னும் இடத்தில தங்கினார்.


நூலின் வேறு பெயர்கள்:

★ தமிழின் முதல் காப்பியம்

★ உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்

★ முத்தமிழ்க்காப்பியம்

★ முதன்மைக் காப்பியம்

★ பத்தினிக் காப்பியம்

★ நாடகப் காப்பியம்

★ குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)

★ புதுமைக் காப்பியம்

★ பொதுமைக் காப்பியம்

★ ஒற்றுமைக் காப்பியம்

★ ஒருமைப்பாட்டுக் காப்பியம்

★ தமிழ்த் தேசியக் காப்பியம்

★ மூவேந்தர் காப்பியம்

★ வரலாற்றுக் காப்பியம்

★ போராட்ட காப்பியம்

★ புரட்சிக்காப்பியம்

★ சிறப்பதிகாரம்(உ.வே.சா)

★ பைந்தமிழ் காப்பியம்


நூல் அமைப்பு:

காண்டங்கள் : 3

1.புகர் காண்டம், 

2. மதுரைக் காண்டம், 

3. வஞ்சிக் காண்டம்


காதைகள் : 30

முதல் காதை : 

மங்கள வாழ்த்துப் பாடல்

இறுதி கதை : 

வரந்தருகாதை  புகார் காண்டம்


புகார் காண்டத்தில் உள்ள காதைகள் = 10

★ முதல் காதை = மங்கள வாழ்த்துப் பாடல் காதை

★ பத்தாவது காதை = நாடுகாண் காதை


மதுரைக் காண்டம்:

★ மதுரைக் காண்டத்தில் உள்ள காதை = 13

★ 11வது காதை = காடுகாண் காதை

★ 23வது காதை = கட்டுரைக் காதை

வஞ்சிக் காண்டம்:

★ வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதை = 7

★ 24வது காதை = குன்றக்குரவை காதை

★ 30வது காதை = வரந்தருகாதை


நூல் எழுந்த வரலாறு:

★ மலைவளம் காண சென்ற இளங்கோவடிகள், சேரன் செங்குட்டுவன், சீத்தலை சாத்தனார் ஆகியோரிடம் அங்கு இருந்த மக்கள் ஒரு பெண் தெய்வத்தை பார்த்ததாக கூறினர்.


★ சீத்தலை சாத்தனார் தனக்கு அப்பெண்ணின் கதை தெரியும் என்று கூறி, அக்கதையை இளங்கோவடிகள் எழுதவேண்டும் எனக் கேட்டார்.


★ சீத்தலைச் சாதனார், இளங்கோவடிகளை “முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக” என வேண்டிக்கொண்டார்.


★ இளங்கோவடிகளும், “நாட்டதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்” எனக் கூறி சிலப்பதிகாரத்தை படைத்தார்.


நூல் கூறும் மூன்று உண்மைகள்:

★ ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்

★ அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

★ உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர்


கதை மாந்தர்கள்:

★ கோவலனின் தந்தை மாசாத்துவான்

★ கண்ணகியின் தந்தை மாநாய்கன்

★ கோவலனின் தோழன் மாடலன்

★ கண்ணகியின் தோழி தேவந்தி

★ மாதவியின் தோழி சுதமதி, 

★ வயந்தமாலை

★ கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்தவள் = மணிமேகலை

★ கண்ணகி கோவில் கட்டியவன் சேரன் செங்குட்டுவன்

★ கோவில் உள்ள இடம் திருவஞ்சிக்களம்(குமுளி)

★ சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் குயிலாலுவம்.


சிறப்புகள்:

★ “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என பாரதியார் கூறுகிறார்.


★ “சிலபதிகாரச் செய்யுளைக் கருதியும்........தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்” என கூறுகிறார் பாரதியார்.


★ “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணமே பிறந்ததில்லை” என்றார் பாரதியார்.


★ “முதன் முதலாகத் தமிழ் மக்கள் எல்லோரையும் ஒருங்கே காணும் நெறியில் நின்று நூல் செய்தவர் இளங்கோவடிகள்” – மு.வரதராசனார்.


★ பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் சிலப்பதிகாரம்


மேற்கோள்:

★ மாசறு பொன்னே, வலம்புரி முத்தே  காசறு விரையே, கரும்பே, தேனே  அரும்பெறல் பாவாய், ஆருயிர் மருந்தே  பெருங்குடி வாணிகன் பெருமட மகளே  இந்தணை மகளிர்க்கு இன்றியமையாக்  கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது  பொற்புடைத் தெய்வம்


★ பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுகத்துக்குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள


தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள் :

சிலப்பதிகாரத்தின் உருவம் , சிலப்பதிகார உரைகள், ஆசிரியர் குறிப்பு ,நூலின் வேறு பெயர்கள் ,நூல் அமைப்பு ,புகார் காண்டத்தில் உள்ள காதைகள் , மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் , நூல் எழுந்த வரலாறு ,  நூல் கூறும் மூன்று உண்மைகள்,கதை மாந்தர்கள் , சிறப்புகள் , மேற்கோள்,..