TNPSC GK -2022..!
பொது அறிவு வினா விடைகள்!!
தென்னிந்திய வரலாறு (பகுதி - 1)!!
Bright Zoom Tamil,
1. ராஜராஜேஸ்வரம் கோவிலை (பிரகதீஸ்வரர் கோவில்) தஞ்சாவூரில் கட்டியவர் யார்?
- முதலாம் இராஜராஜன்
2. கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட சோழ அரசர் யார்?
- முதலாம் இராஜேந்திரன்
3. மூன்றாம் இராஜேந்திர சோழனைத் தோற்கடித்துப் பாண்டியர் ஆட்சியை இன்றைய தமிழகத்தில் நிறுவிய பாண்டிய மன்னன் யார்?
- முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
4. அரசரின் மூத்தமகன் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
- யுவராஜன்
5. வேளாண்வகை என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் --------------- என்றழைக்கப்பட்டனர்.
- வேளாளர்
6. சோழ அரசின் பொதுவருவாய் முக்கியமாக -------------------- மூலம் பெறப்பட்டது.
- நிலவரி
7. நிலவரியானது எவ்வாறு அழைக்கப்பட்டது?
- காணிக்கடன்
8. சோழர்கள் எந்த மதத்தின் மீது மிகுதியான பற்றுக் கொண்டவராவர்?
- சைவ மதம்
9. எண்ணாயிரம் (தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள) எனும் கிராமத்தில் வேதக் கல்லூரி ஒன்றை நிறுவியவர் யார்?
- முதலாம் இராஜேந்திரன்
10. முத்துக்குளித்தலோடு தொடர்புடைய கொற்கை, தொடக்கக்காலத்தில் யாருடைய துறைமுகமாகவும் தலைநகரமாகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது?
- பாண்டியர்கள்
0 Comments