12ம் வகுப்பு தமிழ் பாடநூல் வினா விடை

 1.இளந்தமிழே

-சிற்பி பாலசுப்பிரமணியம்

12th Tamil 

Unit 1 - ilanthamizhae

Sirpi Balasubramananananan.

Book back Question and answer guide:


1 - இளந்தமிழே

-சிற்பி பாலசுப்பிரமணியம்

I.பாடநூல் வினாக்கள்

1. மீண்டுமந்தப் பழமைதலம் புதுக்கு தற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்,

க)பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது 

உ) பொதிகையில் தோன்றியது

ங)வள்ளல்களைத் தந்தது

அ) க மட்டும் சரி

ஆ) க, உ இரண்டும் சரி 

இ) உ மட்டும் சரி

ஈ) க, ங. இரண்டும் சரி


II. குறுவினா : 

1.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

செந்நிறத்து வானம் போல சிவந்த கைகள் உடைய உழைக்கும் தொழிலாளர்களின் திரண்ட தோள் மீது வீற்றிருக்கும் வியர்வை முத்துக்களைப் பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார் சிற்பி. 


III. சிறுவினா :

1) "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்  செந்திறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்"-தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக?

◆ கதிரவன் தன் கதிர்களைச் சறுக்கிக் கொண்டு மேற்கு நோக்கி மறைவது இயற்கை .

◆ ஆனால் கவிஞர் செம்மை மிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் தன் தலை சாய்க்கிறான் என்கிறார். 

◆ கதிரவனின் கதிரொளி பட்டுவானமெனும் காடெல்லாம் பூக்காடாய் மாறின என்று சிற்பி நயம்பட  விளக்குகிறார்.I:

1.தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக?

இளமைப் பொருந்திய தமிழின் திறத்தைக் கவிஞர் சிற்பி பின்வருமாறு பாடுகிறார் .

◆ செம்மை மிகு சூரியன் மாலையில் மலைமுகட்டில் மறையும் போது வானம் எனும் காடு பூக்காடாய்க் காட்சி தருகிறது.

◆ உழைப்பாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் காணப்படுகிறது.

◆இக்காட்சி எல்லாம் நான் வியந்து பாட அன்னைத் தமிழே என் துணை வேண்டும்.

◆ பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே!

◆ தமிழே! நீ பாண்டியனின் தமிழ்ச் சங்கத்தில் தவழ்ந்திருந்தாய் .பாரி முதலான வள்ளல்கள் எழுவரை இம்மண்ணுக்குத் தந்தாய்.

◆ உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ் குயிலே நீ மெய்சிலிர்க்கப் பாடி வா கூண்டினை உடைத்தெறிந்து வெளிவரும் சிங்கம் போல் வா குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா! என்று சிற்பி தமிழின் சீரிளமையைத் திறம் வியந்து பாடுகிறார்.


V. இலக்கணக் குறிப்பு : 

செம்பரிதி:பண்புத்தொகை

செந்தமிழ் :பண்புத்தொகை

செந்நிறம் : பண்புத்தொகை

முத்து முத்தாய் : அடுக்குத்தொடர்

சிவந்து : வினையெச்சம்

வியர்வை வெள்ளம் : உருவகம்