TNPSC போட்டித் தேர்வுகள் - 2022 !!
பொதுத்தமிழ் - இலக்கியம்
யசோதர காவியம்..!
★ ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம்.
★ இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும்.
★ இந்நூலின் ஆசிரியர் பெயர் அறிய முடியவில்லை.
★ இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர்.
★ யசோதர காவியம் 'யசோதரன்" என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.
★ இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது.
★ பாடல்களின் எண்ணிக்கை 320 எனவும், 330 எனவும் கருதுவர்.
யசோதர காவியத்தில் இடம்பெற்ற தொடர்கள்:
★ 'ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக"
★ 'போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக"
சொல்லும் பொருளும்:
■ வெகுளி - சினம்
■ விரதம் - மேற்கொண்ட நன்னெறி
■ அறம் - நற்செயல்
0 Comments