ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கணம் பகுதி - 1
Class VI Tamil Grammar Section – 1
Bright Zoom Tamil,
1.தமிழ் மொழியின் இலக்கண வகைகளை கூறுக?
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் மொத்தம் ஐந்து வகை படும் அவை :
1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்
2. எழுத்து இலக்கணம் என்றால் என்ன?
ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
3. குறில் எழுத்துக்கள் எத்தனை ?
குறில் எழுத்துக்கள் எழுத்துக்கள் - 5 அவை
- அ, இ, உ, எ, ஒ
4. நெடில் எழுத்துக்கள் எத்தனை ?
நெடில் எழுத்துக்கள் - 7 அவை
- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ,ஒள
5. மாத்திரை என்பது என்ன?
மாத்திரை இங்குக் அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது கண் இமைக்கவோ, ஒரு முறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவு ஆகும்.
6. மாத்திரையின் கால அளவுகள்
அளவு - 1 மாத்திரை :
குறில் எழுத்தை ஒலிக்கும் கால 1 மாத்திரை
அளவு - 2 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் கால 2 மாத்திரை
அளவு -1/2 மாத்திரை
★ மெய்யெழுத்து ஒலிக்கும் கால அளவு -1/2 மாத்திரை
★ ஆய்த எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1/2 மாத்திரை
7. வல்லினம் எழுந்துகளை கூறு ?
வல்லினம் - க், ச், ட், த், ப், ற்
8. மெல்லினம் எழுந்துகளை கூறு ?
மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்
9. இடையினம் எழுந்துகளை கூறு ?
இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்
10. உயிர் மெய் யெழுத்துக்கள் என்றால் என்ன?
மெய் எழுத்துக்கள் 18 உடன் உயிர் எழுத்துக்கள் 12-ம் சேர்வதால் தோன்றும் எழுத்துக்கள் உயிர்மெய்யெழுத்துக்கள் எனப்படும்.
உயிர் மெய்யெழுத்து க்களையும்
1.உயிர்மெய்க்குறில்,
2. உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
"கபிலர்" என்னும் சொல்லின்
மாத்திரை -கபிலர் = 1+1+1+1/2 = 32 மாத்திரை
0 Comments