TNPSC தேர்வு - 2023 பத்துப்பாட்டு நூல்களுள்: முல்லைப்பாட்டு மற்றும் மதுரைக்காஞ்சி..!!
TNPSC Exam - 2023 Pattuppattu Noolgalul: Mullaipatthu and Maduraikanji..!!
காவலர் தேர்வு - 2023 - பத்துப்பாட்டு நூல்களுள்:- முல்லைப்பாட்டு மற்றும் மதுரைக்காஞ்சி..!!
காவலர் தேர்வு - 2023
பொதுத்தமிழ்
பத்துப்பாட்டு நூல்கள்
முல்லைப்பாட்டு:
👉 முல்லைப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
👉 இந்நூலினை பாடிய புலவர் நப்பூதனார் ஆவார்.
👉 இது 103 அடிகளைக் கொண்டது.
👉 இந்நூல் அகப்பொருள் சார்ந்தது.
👉 முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் ஆனது.
👉 பத்துப்பாட்டிலே மிகவும் சிறிய நூல் முல்லைப்பாட்டாகும்.
👉 இந்நூல் கார்காலத்தைச் சிறப்பித்து கூறுகிறது.
👉 இந்நூல் முல்லைத்திணைக்குரிய கடவுளான திருமாலைப் போற்றித் தொடங்குகிறது.
👉 பத்துப்பாட்டில் இது ஒன்று மட்டும்தான் பாட்டுடைத் தலைவன் பெயர் குறிப்பிடப்படவில்லை.
👉 தலைவியை பிரிந்த தலைவன் வரும் வரையில் தலைவி காத்து இருப்பது முல்லைத்திணை ஆகும்.
மதுரைக்காஞ்சி:
👉 பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி.
👉 இந்நூல் பத்துப்பாட்டில் மிகப் பெரிய நூல்.
👉 காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.
👉 மதுரையின் சிறப்புகளைப் பாடுவதாலும் நிலையாமையைப் பற்றிக் கூறுவதாலும் மதுரைக்காஞ்சி எனப்பட்டது.
👉 மதுரைக்காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.
👉 இந்நூல் 782 அடிகளைக் கொண்டது. அவற்றுள் 354 அடிகள் மதுரையைப் பற்றி மட்டும் சிறப்பித்துக் கூறுகின்றன.
👉 பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
👉 இதன் பாவகை வஞ்சியடி கலந்த ஆசிரியப்பா.
👉 நாளங்காடி (பகல் நேரம்)இ அல்லங்காடி (இரவு நேரம்) பற்றிக் கூறுகிறது.
👉 'பெருகு வளமதுரைக் காஞ்சி" எனச் சிறப்பிக்கப்படும் இந்நூல்இ 'கூடற்றமிழ்" என்றும் 'காஞ்சி பாட்டு" என்றும் சிறப்புப் பெயர்களைப் பெறுகின்றன.
👉 பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும்இ வளத்தையும் கூறுகின்ற இந்நூல்இ அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது.
0 Comments